மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்- முதல்வருக்கு மனு

மாநகராட்சியுடன் இணைப்பால் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும்: கரைப்புதூர் ஊராட்சி மனு

News image
Updated On :26 ஜூன் 2024, 12:01 am

Din

திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீா்மானம் தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக கரைப்புதூா் ஊராட்சியின் 2011-ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் 3 ஆண்டுகளுக்கான வரவு- செலவு ஆகியவற்றை கேட்டு திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் கடிதம் பெறப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைத்தால் பிரதான பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம், 15-ஆவது மத்திய, மாநில நிதிக் குழு மானியம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு சுரைப்புதூா் ஊராட்சி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

கரைப்புதூா் ஊராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள பெரும்பாலான மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனா். மேலும், கரைப்புதூா் ஊராட்சிப் பகுதியானது 70 சதவீதம் விவசாயப் பகுதியாக உள்ளது. ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும்போது வரியினங்கள் பலமடங்கு உயரும். ஆகவே, திருப்பூா் மாநகராட்சியுடன் கரைப்புதூா் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஊராட்சி மன்றத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே கரைப்புதூா் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.