அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குன்னத்தூா் பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்

குன்னத்தூா் பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:10 pm

Din

குன்னத்தூா் பேரூராட்சியில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீட்டு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்று மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் குன்னத்தூா் கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ராஜ்பரத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விபரம்: குன்னத்தூா் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 2-ஆவது கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும் விண்ணப்பித்த பொது மக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் குடிநீா் இணைப்புகள் வழங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, குன்னத்தூா் பேரூராட்சியில் வீட்டு குடிநீா் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். அதேபோல, ஊத்துக்குளி பேரூராட்சியிலும் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருப்பூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாா், ஊத்துக்குளி வட்டார செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.