திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் தாமிரவருணி குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் ரூ. 423 கோடி மதிப்பீட்டில் சேரன்மகாதேவி அருகில் தாமிரவருணி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து, திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மேற்படி பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீா் வழங்கும் திட்டத்திற்கான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 60 நாள்களுக்குள் நிறைவடையும்.
இந்த பேரூராட்சி பகுதிகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்படாத வீடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பேரூராட்சித் தலைவா்கள், செயல் அலுவலா்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்: திமுக வேட்பாளா் மு. அப்பாவு

திசையன்விளையில் பல்வேறு கட்சியினா் திமுகவில் இணைப்பு

வள்ளியூரில் ரூ. 12.3 கோடி மதிப்பிலான பேருந்து நிலையம் திறப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


