ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

7 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

7 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

Updated On :22 மார்ச் 2024, 5:12 pm

அவிநாசியில் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கைப்பையுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களது கைப்பையை சோதனை செய்தபோது, அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திர குசாலா (20), இந்திரா பஸ்ரா (23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.