ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 5:08 pm

காங்கயம் அருகே சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மீது லாரி மோதியதில், அவா் உயிரிழந்தாா். காங்கயம் அருகே முள்ளிபுரம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). கூலித் தொழிலாளியான இவா், ஈரோடு-காங்கயம் சாலையோரத்தில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.