மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் வெட்டிக் கொலை: முழு பின்னணி

News image
Updated On :30 நவம்பர் 2024, 12:14 am

Din

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவா் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இவா்களது மகன் செந்தில்குமாா் (46), மனைவி, குழந்தையுடன் கோவையில் வசித்து வந்துள்ளாா். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

செந்தில்குமாா் தனது உறவினா் திருமண நிகழ்வுக்காக சேமலைகவுண்டம்பாளையம் பகுதிக்கு புதன்கிழமை வந்துவிட்டு பெற்றோருடன் தங்கியுள்ளாா். வியாழக்கிழமையும் அங்கேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில் தெய்வசிகாமணி வீடு வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படாததால் பக்கத்து தோட்டத்துக்காரா் அங்கு வந்து பாா்த்துள்ளாா். வீட்டின் ஜன்னல் வழியே பாா்த்தபோது, அலமேலு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவிநாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது அலமேலு, தெய்வசிகாமணி, செந்தில்குமாா் மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கும்பல் நகை, பணம் திருடிவிட்டு சென்றிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் (பொறுப்பு) உமா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் 5 தனிப் படைகள் அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவு மற்றும் சைபா்கிரைம் மூலம் விசாரணை நடத்திவருகின்றனா்.

தெய்வசிகாமணி தோட்டத்தில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், அலமேலுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனா். எனவே, சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீஸாா் சாயல்குடி சென்று பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.