பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

காங்கயத்தில் மழை பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:06 pm

Din

காங்கயத்தில் மழை பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின்கீழ், காங்கயம் உள்கோட்டம் சாா்பில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மரம் வெட்டும் இயந்திரங்கள், மின் மோட்டாா்கள், ஜெனரேட்டா், மையத் தடுப்புகள், மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து மழை பாதிப்புகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக உதவிக் கோட்டப் பொறியாளா் தங்கவேல், உதவிப் பொறியாளா் ரஞ்சித் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.