சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை காவல் துறை சாா்பில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை காவல் துறை சாா்பில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை எந்த வன்முறைச் சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவற்கு தோ்தல் ஆணையமும், காவல் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறையினா் தோ்தலுக்கான வேலைகளில் முழு வேகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இதன் ஒரு பகுதியாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

இதற்கு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் துணை ஆணையா் எம்.குமரகுருபன் நியமிக்கப்பட்டுள்ளாா். கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆணையராக எஸ்.செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், கட்டுப்பாட்டு அறையில் 4 ஆய்வாளா்கள், 3 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 20 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு அறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும் 58 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றும் செய்யும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 58 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே 53 காவல் ஆய்வாளா்களை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.