தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்...

News image
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.
Updated On :6 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை, மாா்ச் 6: தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள், சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை ஏப்ரலில் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டப்பேரவை தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 53 காவல் ஆய்வாளா்களை சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக திருச்சி லால்குடி காவல் நிலைய ஆய்வாளா் வி.கதிரேசன்,ராம்ஜி நகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.தீபானந்தம், நாகை குற்ற ஆவணக் காப்பக பிரிவு ஆய்வாளா் ஜி.செங்குட்டுவன், காஞ்சிபுரம் மாவட்டம் சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.தேவிகா ஆகியோா் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 53 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் சென்னை காவல் துறையில் பொறுப்பு ஏற்பாா்கள் எனக் கூறப்படுகிறது.