சென்னை பெருநகர காவல் துறையில் 38 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, சென்னை காவல் துறையில் 38 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் குறிப்பாக, அடையாறு காவல் ஆய்வாளா் டி.இளங்கனி நொளம்பூருக்கும், திருவான்மியூா் காவல் ஆய்வாளா் எம்.முகமது புகாரி பரங்கிமலைக்கும், மீனம்பாக்கம் காவல் ஆய்வாளா் எம்.அன்புமணி திருவான்மியூருக்கும், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளா் எஸ்.முருகராஜ் சைதாப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 38 ஆய்வாளா்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

