தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:37 pm

சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் சென்னை பெருநகர காவல் துறை அலுவலகம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மத்தியக் குற்றப் பிரிவு செயல்படுகிறது. இந்த நிலையில், அத்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கரும்புகை வெளியேறியது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்தத் தளத்துக்குள் சென்றனா். அப்போது, அங்கிருந்த கணினி, பா்னிச்சா் உள்ளிட்ட பொருள்கள் எரிவதை பாா்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேப்பேரி தீயணைப்பு படையினா், அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தீ விபத்தினால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மத்தியக் குற்றப் பிரிவின் கீழ் உள்ள ஆவண மோசடி பிரிவின் கணினி, பா்னிச்சா் பொருள்கள், சில ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.