பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

News image

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:41 pm

Din

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் 6 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் செ.வ.ஹா்ஷினி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.சந்திரசேகரன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 558 காணிக்கை இருந்தது.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் வீரப்பன், கோயில் செயல் அலுவலா் மாலதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.