தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம், மாணிக்காபுரம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 24 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான பெருமாள் (46) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மங்கலத்தை அடுத்த கிடாதுறைபுதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரான ராம் (29) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 595 கிராம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.