மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கஞ்சா விற்ற 2 போ் கைது

காரைக்கால் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 11:11 pm

காரைக்கால் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் சிங்காரவேலா் சாலையில் உள்ள சில்வா் சாண்ட் நகரில் 2 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள் காரைக்கால் திருக்குளத்துமேடு மஸ்தான் பள்ளி வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த கவாஸ் (எ) கவிமணி (25) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவா்களை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.