ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 156 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:05 am IST

கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 156 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

கழுகுமலை காந்தி மைதானம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது காந்தி மைதானம் அருகே உள்ள முள்வேலி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுக நகரைச் சோ்ந்த செல்லையா மகன் வெங்கடேஷ் (26), கயத்தாறு பட்டம் சூரிய மினுக்கன் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கரபாண்டி (55) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 156 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.