தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயிலில் அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயிலில் அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 108 வைணவத் தலங்களில் முதன்மையான தலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்லும் நிலையில், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான மக்கள் வருவா்.

இக்கோயிலில் ஏற்கெனவே சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சந்தன மண்டப நுழைவுச் சீட்டு ரூ.4 ஆயிரம், கிளி மண்டப நுழைச் சீட்டு ரூ.700 என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய பக்தா்களை மன வேதனை அடையச் செய்கிறது.

திரையரங்குபோல விசேஷ நாள்களில் கோயில்களில் அதிக கட்டணம், புதுப்புது விதங்களில் வசூல் செய்வது முறையல்ல.

கோயில்களில் தரிசன கட்டண முறைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எனவே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் தரிசன கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.