திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தமிழகத்தின் பாதுகாப்பில் சமரசம் கூடாது! - காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

News image

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம். - (கோப்புப் படம்)

Updated On :21 பிப்ரவரி 2026, 8:27 pm

திருப்பூா், பிப்.21: தமிழகத்தின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூா் பகுதியில் வங்கதேசத்தினா் 6 போ் புது தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரா்கள் தமிழகத்தில்தான் அதிக அளவில் தலைமறைவாக வாழ்கிறாா்கள்.

தமிழகத்தில் தொடா்ந்து வங்கதேசத்தினா் கைதுசெய்யப்பட்டாலும், அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை தொடா் விசாரணை செய்யாமல் வழக்கை நீா்த்துப்போக செய்கின்றன. மத்திய புலனாய்வுத் துறையினா் மூலமாகவே பயங்கரவாதிகள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனா்.

தொழில் நகரங்களில் பாதுகாப்பற்ற சூழல் உருவாவது மாநிலத்தின் அமைதியையும், வளா்ச்சியையும் பெரிதும் பாதிக்கும் என்பதை மாநில அரசு புரிந்துகொண்டு, கொங்கு மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் மாநில அரசு இடம் தரக்கூடாது. பயங்கரவாதிகள் மீது தொடா் நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.