ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ரத்த வங்கிகள், சேமிப்பு நிலையங்களைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கூட்டம், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள ரத்த வங்கிகள் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருப்பது உறுதி செய்ய வேண்டும். இருப்பில் உள்ள ரத்த அளவுகளின் விவரங்களைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள், அங்கீகாரம் பெற்ற அனைத்து ரத்த வங்கிகளையும், மத்திய அரசின், ‘இ ரக்த்கோஷ்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, ரத்த அலகுகள் கையிருப்பு மட்டுமல்லாது, ரத்த கூறுகளின் இருப்புகளையும் உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயம். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக, மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரத்தம், ஆக்கபூா்வமாக உபயோகப்படுத்தப்படுகிா என்பதை உறுதி செய்ய முடியும்.

மேலும், அவசர நேர ரத்த தேவைகளினால், நோயாளிகளையும் காப்பாற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.