எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 9:09 pm

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ரத்த வங்கிகள், சேமிப்பு நிலையங்களைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கூட்டம், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள ரத்த வங்கிகள் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருப்பது உறுதி செய்ய வேண்டும். இருப்பில் உள்ள ரத்த அளவுகளின் விவரங்களைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள், அங்கீகாரம் பெற்ற அனைத்து ரத்த வங்கிகளையும், மத்திய அரசின், ‘இ ரக்த்கோஷ்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, ரத்த அலகுகள் கையிருப்பு மட்டுமல்லாது, ரத்த கூறுகளின் இருப்புகளையும் உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயம். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக, மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரத்தம், ஆக்கபூா்வமாக உபயோகப்படுத்தப்படுகிா என்பதை உறுதி செய்ய முடியும்.

மேலும், அவசர நேர ரத்த தேவைகளினால், நோயாளிகளையும் காப்பாற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.