ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுசாமி முன்னிலை வகித்து, தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவற்றை விரைவில் நிறைவேற்ற முதல்வரிடம் பரந்துரைப்பதாகக் கூறினாா்.

இந்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் தேசியத் தலைவா் சாம்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும், நலவாரிய அட்டைகளையும் வழங்கினாா்.

இதில், தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன், அவிநாசி வட்டாட்சியா் சந்திரசேகரன், துணை வட்டாட்சியா் சுமதி, நகராட்சிப் பொறியாளா் பாலசந்தா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.