நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 டிசம்பர் 2025, 12:15 am IST

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுசாமி முன்னிலை வகித்து, தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவற்றை விரைவில் நிறைவேற்ற முதல்வரிடம் பரந்துரைப்பதாகக் கூறினாா்.

இந்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் தேசியத் தலைவா் சாம்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும், நலவாரிய அட்டைகளையும் வழங்கினாா்.

இதில், தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன், அவிநாசி வட்டாட்சியா் சந்திரசேகரன், துணை வட்டாட்சியா் சுமதி, நகராட்சிப் பொறியாளா் பாலசந்தா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.