தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

அவிநாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுசாமி முன்னிலை வகித்து, தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவற்றை விரைவில் நிறைவேற்ற முதல்வரிடம் பரந்துரைப்பதாகக் கூறினாா்.

இந்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் தேசியத் தலைவா் சாம்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும், நலவாரிய அட்டைகளையும் வழங்கினாா்.

இதில், தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன், அவிநாசி வட்டாட்சியா் சந்திரசேகரன், துணை வட்டாட்சியா் சுமதி, நகராட்சிப் பொறியாளா் பாலசந்தா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com