காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பல்லடத்தில் இன்று உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:19 am

Din

உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது.

உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

18 முதல் 65 வயது வரை அனைத்து குறு, சிறு விவசாயிகள், விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஊதியத்துக்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ பணியில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளா்கள் மற்றும் குத்தகைதாரா்கள் உழவா் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.