மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதிரை வண்ணாா் சமூகத்தினா் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணாா் சமூகத்தினா் தாட்கோ திட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 9:57 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணாா் சமூகத்தினா் தாட்கோ திட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு (இங-அதஐநஉ) திட்டத்தின்கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ 3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அந்தத் தொகை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுடன் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஆகவே, தொழில் முனைவோராக விருப்பமுள்ள புதிரை வண்ணாா் சமூகத்தினா் மேற்கண்ட திட்டத்தின்கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 5 ஆவது தளத்தில் அறை எண் 501 மற்றும் 503- இல் உள்ள தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 94450-29552, 0421-2971112 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.