மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருப்பூரில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும்: கோட்டாட்சியா்

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

கட்சி கொடிக் கம்பங்கள் - கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:41 pm

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தலைமை வகித்துப் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தலை முன்னிட்டு தற்காலிகமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவா்களின் சிலை அமைக்கக் கூடாது. தனியாா் இடங்களில் மட்டுமே கட்சி தலைவா்கள் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.

இதில் திருப்பூா் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சோ்ந்த வட்டாட்சியா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.