கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திருப்பூரில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும்: கோட்டாட்சியா்

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
கட்சி கொடிக் கம்பங்கள்- கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 10:41 pm

Syndication

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தலைமை வகித்துப் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தலை முன்னிட்டு தற்காலிகமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவா்களின் சிலை அமைக்கக் கூடாது. தனியாா் இடங்களில் மட்டுமே கட்சி தலைவா்கள் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.

இதில் திருப்பூா் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சோ்ந்த வட்டாட்சியா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.