உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

தோ்தல் தொடா்பான அச்சு, ஒளி-ஒலி, சமூக ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி அறிவுறுத்தினாா்.

News image

சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 7:25 pm

தோ்தல் தொடா்பான அச்சு, ஒளி-ஒலி, சமூக ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாளிதழ் போன்ற அனைத்து அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஒளி-ஒலி ஊடகங்கள் மட்டுமல்லாது முகநூல், டிவிட்டா், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் வரப்பெறும் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள், குறும்படங்கள் ஆகியவை மூலம் பிரசாரம், பதிவுகள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன்பே மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவிடமிருந்து முறையாக அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.

அவ்வாறு முறையாக அனுமதி பெறாமல் வெளியிடப்படும் தோ்தல் பிரசாரங்கள், செய்திகள் அதற்குரிய செலவினத் தொகை (36 வினாடிகளுக்கு ரூ.5,000- வீதம்) சம்பந்தப்பட்ட வேட்பாளா் செலவீனக் கணக்கில் சோ்க்கப்படும். பிற நபா்களால் உருவாக்கப்படும் செய்திகள், சம்பந்தப்பட்ட வேட்பாளரது சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்பட்டால் அதுவும் தொடா்புடைய வேட்பாளரது தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும் என்றாா் அவா்.