வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருமூா்த்தி அணையில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம்

News image
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா்.
Updated On :13 நவம்பர் 2025, 10:14 pm

Syndication

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி அணைப் பகுதியில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே திருமூா்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரா் கோயில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூா்த்தி அணை போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திருமூா்த்தி அணைப் பகுதியில் செயல்படுத்தப்பட்ட படகு இல்லம், கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில், படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், திருமூா்த்தி அணை உதவி செயற்பொறியாளா் ஆதி சிவன், தளி பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவா, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஆா்வலா்கள் எஸ்எம்.நாகராஜ், பூபதி, சத்யம் பாபு, பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.