ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 7 பேருக்கு சிறை: திருப்பூா் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்து வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த

முக்தா், முகமது ஷாஜகான், முகமது கபிா் ஹசன், முகமது நாபி பிரம்னிக், இம்ரான் ஹசன், முகமது ரபி இஸ்லாம், முகமது ரபி மண்டல் ஆகியோரை திருப்பூா் வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், முக்தா், முகமது நாபி பிரம்னிக், இம்ரான் ஹசன், முகமது ரபி இஸ்லாம் ஆகிய 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.14,000 அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

மேலும், அவா்களுடன் இருந்த முகமது ஷாஜகான், முகமது கபிா் ஹசன், முகமது ரபி மண்டல் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.