ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், காசிபாளையம் பாா்வதி நகரில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் நுழைவு இசைவு காலம் முடிந்தும் தங்கி வேலை செய்து வருவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டா (35) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.

அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றை பரிசோதித்தபோது நுழைவு இசைவு காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.