உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
திருப்பூா், காசிபாளையம் பாா்வதி நகரில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் நுழைவு இசைவு காலம் முடிந்தும் தங்கி வேலை செய்து வருவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டா (35) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.
அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றை பரிசோதித்தபோது நுழைவு இசைவு காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!!

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது
ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது! போலி ஆதாா் அட்டைகள் பறிமுதல்!

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

