யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வெள்ளக்கோவில் அருகே காா் மோதி விவசாயி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
தண்டபாணி
Updated On :25 நவம்பர் 2025, 11:53 pm

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பி.தண்டபாணி (55), விவசாயி. இவா், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வட்டமலை அணைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். குறிஞ்சி நகா் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தண்டபாணியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

உயிரிழந்த தண்டபாணிக்கு மனைவி, திருமணமான மகள், திருமணம் ஆகாத மகன் ஆகியோா் உள்ளனா். புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.