ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராமையா மகன் சேகா்(52). இவா் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுளை ஒட்டிச்சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.