டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூரில் செப்.12-ல் தொழில் துறையினருடன் சந்திப்பு!

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

News image
பிரசாரம்  மேற்கொண்ட  எடப்பாடி  கே. பழனிசாமி.
Updated On :9 செப்டம்பர் 2025, 6:50 pm

Syndication

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

இது குறித்து, அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பா் 11-ஆம் தேதி வருகிறாா்.

இதன்படி காங்கயம் தொகுதியில் செப்டம்பா் 11-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்று இரவு திருப்பூா், அனுப்பா்பாளையத்திலிருந்து 15 வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அங்கு அனைத்து தொழில் அமைப்பினா் மற்றும் வா்த்தகா்களை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூா் வடக்கு தொகுதியில், பி.என்.சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் தெற்கு தொகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா்.