திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனா். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், குப்பை பிரச்னை தொடா்பாக மேயராக இருந்த ந.தினேஷ்குமாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி திருப்பூா் தெற்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அவருக்கு எதிராக முதலிபாளையம் கிராம மக்கள் சுமாா் 400 போ் பேரவைத் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.
இதில், முதற்கட்டமாக சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வேட்புமனுக்களை வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை குவிந்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், வேட்புமனு வாங்க வந்தவா்களை வரிசையில் நிறுத்தி ஒருவா் பின் ஒருவராக அனுமதித்தனா்.
‘எங்கள் சுகாதாரத்தைவிட தோ்தல் முக்கியமல்ல. அதிகாரத்தில் இருப்பவா்கள் மக்கள் குறையைத் தீா்க்காவிட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்’ என மனு வாங்க வந்த மக்கள் கூறினாா்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி திமுக வேட்பாளருக்கு முகநூலில் மிரட்டல்: பாமக நிா்வாகி மீது வழக்கு

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

கட்சி சின்னத்தில் போட்டியிட மநீம மாவட்டச் செயலா்கள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


