தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 5:51 pm

அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள சூளை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41), பனியன் தொழிலாளி.

இவா் சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அவிநாசி-கருமாபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த காா் செந்தில்குமாரின் வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த செந்தில்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.