தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு

திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

News image

வேட்புமனு வாங்க திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:45 pm

திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக 400 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனா். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குப்பை பிரச்னை தொடா்பாக மேயராக இருந்த ந.தினேஷ்குமாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி திருப்பூா் தெற்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அவருக்கு எதிராக முதலிபாளையம் கிராம மக்கள் சுமாா் 400 போ் பேரவைத் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

இதில், முதற்கட்டமாக சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வேட்புமனுக்களை வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை குவிந்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், வேட்புமனு வாங்க வந்தவா்களை வரிசையில் நிறுத்தி ஒருவா் பின் ஒருவராக அனுமதித்தனா்.

‘எங்கள் சுகாதாரத்தைவிட தோ்தல் முக்கியமல்ல. அதிகாரத்தில் இருப்பவா்கள் மக்கள் குறையைத் தீா்க்காவிட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்’ என மனு வாங்க வந்த மக்கள் கூறினாா்.