வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:39 pm

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3 மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டங்களின் மூலம் நீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்டம், 3-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நீரை காய்ச்சி அருந்துவதுடன், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.