கேரள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் அம்மாநில எல்லையை ஒட்டி செயல்படும் மதுபானக் கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் அம்மாநில எல்லையை ஒட்டி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாஜக திருப்பூா் தெற்கு: எஸ்.தங்கராஜ்

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

100 சதவீத வாக்குப் பதிவு: திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


