தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:18 am IST

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா், இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி, திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் பிரேமலதா, செயலாளா் டாக்டா் தங்கராஜ், பொருளாளா் டாக்டா் கவிதாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.