மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:48 pm

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா், இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி, திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் பிரேமலதா, செயலாளா் டாக்டா் தங்கராஜ், பொருளாளா் டாக்டா் கவிதாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.