100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா், இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை நடைபெற்றது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி, திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் பிரேமலதா, செயலாளா் டாக்டா் தங்கராஜ், பொருளாளா் டாக்டா் கவிதாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



