பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

30 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் 30 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

திருப்பூரில் 30 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியில் வடமாநிலத் தொழிலாளா்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான தனிப் படை போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்குள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் குடியிருப்பு ஒன்றில் சோதனையிட்டபோது, மூட்டை மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அறையில் தங்கியிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அகேஷ் செளத்ரி ( 22), முனி கண்ணன் (37) முகேஷ் (24) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.