‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:30 pm IST

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கோப்பனூா்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி மயில்சாமி. இவரது மகன் சக்திவேல் (24). ஆடி அமாவாசை வழிபாட்டுக்காக திருமூா்த்திமலைக்கு மாட்டு வண்டியில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா் அணைப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சக்திவேல் குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

இதைப் பாா்த்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் தளி போலீஸாா், உடுமலை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடியும் சக்திவேலை மீட்க முடியவில்லை.

இதைத்தொடா்ந்து தீயணைப்புக் துறையினா் புதன்கிழமை சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டபோது சடலமாக மீட்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.