எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அவிநாசியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

அவிநாசியில் நடைபெற்ற ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் மனீஷ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

News image

பொது மக்களிடம்  கோரிக்கை  மனுக்களை  பெறுகிறாா்  ஆட்சியா்  மனீஷ்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:49 am IST

அவிநாசியில் நடைபெற்ற ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் மனீஷ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட இ-சேவை மையம், ஆரம்ப சுகாதர நிலையம், நியாய விலைக் கடைகள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை கிடங்குகள், பள்ளிகள், வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், நில வருவாய் ஆய்வாளா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா். பின்னா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் வரப் பெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதசில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, கோட்டாட்சியா் சிவபிரகாஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுரா, தனி துணை ஆட்சியா் (சமூகப் பாதுகப்புத் திட்டம்) பத்மபிரியா, இணை இயக்குநா் (வேளாண்மை) ஆதிசாமி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) பிரபு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சதீஷ், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வெங்கடாச்சலம் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.