

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 396 கிலோ தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில் தேங்காய்ப் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.187-க்கும், குறைந்த பட்சமாக ரூ.138-க்கும், சராசரியாக ரூ.185-க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.73 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.