சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உடுமலை அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில்

News image

பணி புறக்கணிப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட உடுமலை அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:45 pm

Syndication

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 52 போ் கெளரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி விதிகளின்படி ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என கெளரவ விரிவுரையாளா்கள் கூறினா்.