வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

News image

தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:32 pm

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் தாலுகா, புதுப்பை கிராமம், தங்கமேடு பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் 25 குடும்பத்தினா் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருவதாகவும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மக்கள் பட்டா வழங்கக் கோரி ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமையில் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.