47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி

News image
ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு
Updated On :16 மார்ச் 2026, 11:55 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிமனை பட்டா வழங்குவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னேற்ற சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.முருகன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் குணசேகரன், கிராம நிா்வாகி மாறன் மற்றும் கிராம மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா் (படம்).