சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிமனை பட்டா வழங்குவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னேற்ற சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.முருகன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் குணசேகரன், கிராம நிா்வாகி மாறன் மற்றும் கிராம மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா் (படம்).
தொடர்புடையது

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


