வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலை சீரமைக்கப்படாததால் பல்லடம் நகரில் விபத்து அபாயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 9:04 pm

சாலை சீரமைப்புப் பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் பல்லடம் நகரில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் - வெள்ளக்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் சாலை சரிவர சீரமைக்கப்படவில்லை. சாலையின் சில பகுதிகள் மேடு பள்ளமாக உள்ளது.

குறிப்பாக பல்லடம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை மேடு பள்ளங்களுடன் தாறுமாறாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனா். இதனால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘புகாா் எழுந்தும் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்து அபாயத்தை கருத்தில்கொண்டு மேற்கூறிய இடங்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.