காங்கயத்தில் பயனாளிகள் 717 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

காங்கயத்தில் பயனாளிகள் 717 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

Published on

காங்கயத்தில் பயனாளிகள் 717 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா்.

இதில் ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளக்கோவில், ஊதியூா், பாப்பினி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 717 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், அனுராதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com