ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா


ராசிபுரம் அருகேயுள்ள காா்கூடல்பட்டி, நாரைக்கிணறு பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 128 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கா.சரவணன் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று காா்கூடல்பட்டி, நாரைக்கிணறு ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் நாரைக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வழங்குவதாகக் கூறி நிறைவேற்றவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 40 ஆயிரம் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில், வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...