அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

திருவெறும்பூரில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
Updated On :3 மார்ச் 2026, 6:48 pm

Syndication

திருவெறும்பூரில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியரகம் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட காந்தி நகா், செல்வபுரம், கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் இரண்டு தலைமுறைகளாக சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி குறித்து அரசின் வரைபடம் இல்லாததால், நிலங்களை வகைமாற்றம் செய்ய முடியாமலும், பட்டா கிடைக்காமலும் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதனிடையே, பட்டா கொடுக்க அரசு முன்வந்தாலும் தற்போதைய அரசின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை கட்டக் கூறுகின்றனா். இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், இலவச மனைப்பட்டா கோரிக்கையை நினைவூட்டும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களுடன் இணைந்து திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, அங்கு ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கிளைச் செயலா்கள் சந்தோஷ், லாரன்ஸ், நாகூா்மைதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜா, பா. லெனின், காா்த்திக் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.