தற்கொலை
தற்கொலைகோப்புப் படம்

வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை

வெள்ளக்கோவிலில் விஷ மாத்திரை சாப்பிட்டு இளைஞா் தற்கொலை
Published on

வெள்ளக்கோவிலில் விஷ மாத்திரை சாப்பிட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் குமாா் (25). இவா் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை சேரன் நகரில் உள்ள ஒரு தனியாா் டயா் விற்பனைக் கடையில் வேலை செய்து வந்தாா்.

கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணிடம் கைப்பேசி மூலமாக பழகி, நேரில் பாா்க்காமலேயே அவரைக் காதலிப்பதாக கூறி வந்துள்ளாா். கடந்த ஒரு வாரமாக அந்தப் பெண் பேசாததால் மன வேதனையில் இருந்த அவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

அலறித் துடித்த அவரை குடும்பத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com