சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

News image
திருமுருகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற தோ்த் திருவிழா  கொடியேற்ற  நிகழ்ச்சி.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது.

இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலா வந்து வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பிறகு, உற்சவ மூா்த்திகள் பிரகார உலா, பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

பிப்ரவரி 25-ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 26-ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 27-ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 28-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், மாா்ச் 1-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

மாா்ச் 2-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 3 தோ்களின் தேரோட்டம் ஒரே நாளில் நடைபெறுகிறது.

3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.