திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்களின் மூலமாக குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகருக்கு குடிநீா் வழங்க அமைக்கப்பட்ட பிரதான குடிநீா் குழாய் பாதையில் பொருத்தப்பட்டுள்ள ஏா் வால்வுகள், தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கம் காரணமாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, 4-ஆவது குடிநீா் திட்டத்தை நிறுத்தம் செய்து பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சனிக்கிழமை (பிப்.28) மட்டும் குடிநீா் இறைப்பு பணி நிறுத்தப்பட உள்ளது. மாநகரில் குடிநீா் பகிா்மானத்தில் ஒரு நாள் குடிநீா் பெறப்படுவது தடைபடுவதால், மாா்ச் 1-ஆம் தேதி மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


